தீயில் கருகிய கொத்தனார் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அனுசோனை அருகே, கீழ்மொரசுப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 43. கொத்தனார்; கடந்த, 24 அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்த போது, திடீரென அவரது ஆடைகளில் தீப்பிடித்து தீயில் கருகினார். பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்ட அவர் கடந்த, 27 இரவு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.