உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இ-பர்மிட் இன்றி கனிமங்களை கொண்டு சென்றால் நடவடிக்கை

இ-பர்மிட் இன்றி கனிமங்களை கொண்டு சென்றால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இ-பர்மிட் எனப்படும் மின்னணு நடைசீட்டுகள் இல்லாமல் கனிமங்களை வாகனங்களில் ஏற்றி சென்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்வது தொடர்பாக மின்னணு நடைசீட்டு (இ-பர்மிட்) நடைமுறை கடந்த, 12 ல் சூளகிரி தாலுகாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, குவாரி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில், இ-பர்மிட் பெற்று, கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்கிறார்கள். அதைத்தொடர்ந்து ஓசூர் தாலுகாவில் கடந்த, 16 முதல், இ-பர்மிட் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மாவட்டத்தில் மற்ற அனைத்து தாலுகாவிலும் இதே, இ-பர்மிட் நடைமுறை படுத்தப்பட உள்ளது.மாவட்டத்திலுள்ள குவாரி உரிமையாளர்கள் இனி வரும் நாட்களில், கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்ல, ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பெறப்பட்ட, இ-பர்மிட் மட்டுமே பயன்படுத்தி, கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும். இ-பர்மிட் இல்லாமல் கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்வது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக, 04343 - 1077 அல்லது 04343 - 234444 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ