ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி, சிக்காரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சிக்காரிமேட்டிலுள்ள ஒரு ஓட்டல் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 6 யூனிட் ஜல்லிகற்களை, சூளகிரியில் இருந்து காவேரிப்பட்டினத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. அவர் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரான காவேரிப்பட்டணம் கிருஷ்ணன், 61, டிரைவர் சுந்தர், 35, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.