மேலும் செய்திகள்
கடித்த பாம்புகளுடன்ஜி.ஹெச்., வந்த இருவர்
11-Apr-2025
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் மாரியப்பன், 48, திருமணம் ஆகாத இவர், அதே பகுதியில் அடிக்கடி குடித்து விட்டு போதையில், இந்த ஊரில் உள்ள நிலங்கள் எல்லாம் எங்களுடைய பூர்வீக சொத்து என்றும், தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தருமன், 55, என்பவர் ஊரின் ஒதுக்குபுறத்தில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அவரிடம் மாரியப்பன் இந்த இடம் எங்களுக்கு சொந்தம். இங்கு எப்படி மது அருந்தலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தேங்காய் உரிக்கும் கடப்பாரையால் தாக்கியுள்ளார். தருமன் புகார் படி, பாரூர் போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
11-Apr-2025