உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கிருஷ்ணகிரி; திருப்பத்தூர் மாவட்டம், பாலனகுப்பத்தை சேர்ந்தவர் சர-வணன். இவர் மீது கடந்த, 2004 முதல் கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை கந்திகுப்பம் போலீசார் பதிவு செய்துள்ளனர்.இவ்வழக்குகள், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்-றத்தில் நடந்து வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்ட சரவணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தேடப்-படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை வரும், 17க்குள் வழக்கறிஞர் மூலமாகவோ அல்லது தாமாகவோ கிருஷ்-ணகிரி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகு-மாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை