உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பால் உற்பத்தியாளர்கள் 3வது மாவட்ட மாநாடு

பால் உற்பத்தியாளர்கள் 3வது மாவட்ட மாநாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு பால் உற்பத்தியா-ளர்கள் சங்கத்தின், 3வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பெருமாள், செயலாளர் சிவாஜி, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ் ஆகியோர் பேசினர்.மாநாட்டில், தவிடு, பருத்திக்கொட்டை, புண்-ணாக்கு, கலப்பு தீவனங்கள், கால்நடைகள் விலை உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை, ஒரு லிட்டருக்கு, 10 ரூபாய் வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு, 45 ரூபாயும், எருமைப்பா-லுக்கு, 60 ரூபாயாகவும், ஊக்கத்தொகை ஒரு லிட்-டருக்கு, 10 ரூபாய் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தரமான கால்நடை தீவனம், 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். கால்நடைக-ளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்-டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு ஆவின் பணியாளர்களுக்கு இணையான சம்ப-ளத்தை உயர்த்தி, அதில், 50 சதவீதம் தொகை, ஆவின் நிர்வாகமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 தீர்மானங்களை நிறைவேற்றினர்.மாநாட்டில், புதிய நிர்வாகிகளாக, மாவட்ட தலைவர் சக்தி, மாவட்ட செயலாளர் அண்ணா-மலை, பொருளாளர் முனிராஜ் ஆகியோர் தேர்ந்-தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ