| ADDED : ஜூன் 22, 2024 12:38 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் நடத்தப்படும், எரிவாயு நுகர்வோர் முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வரும், 24 மாலை, 4:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.