உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி

நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சியில், மாரியம்மன் திருவிழா நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து,4 நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து நிலவாரப்பட்டி மக்கள் கூறியதாவது: நேற்று மாலை, 5:30 மணிக்கு ஏற்பட்ட மின் தடை இரவு, 9:30 மணி வரையிலும் சரி செய்யப்படவில்லை. தாசநாயக்கன்பட்டி மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என்ற பதிலையே தெரிவிக்கின்றனர். திருவிழா நாட்களில் ஏற்படும் மின்தடையால், விருந்தினர்கள் இடையே சங்கடம் ஏற்படுகிறது. 4 நாட்களாக, சமையல் செய்யும் நேரம், சாப்பிடும்போது மின்தடை ஏற்படுகிறது. 2 மணி நேரத்துக்கு பின் வினியோகம் செய்கின்றனர். தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை