| ADDED : டிச 26, 2025 06:05 AM
ஓசூர்: ராயக்கோட்டை அடுத்த சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் இளவ-ரசி, 27, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 23ல், இவர் ராயக்-கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஸ்கூட்-டரில் சென்றார். அங்கு வந்த தொட்லம்பட்டியை சேர்ந்த பீமன், 31, என்பவர் முன்விரோதம் காரணமாக இளவரசியை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக கிருஷ்ண-கிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளவரசி புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.கிறிஸ்துமஸ் வாழ்த்துஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி நேதாஜி நகர் பகு-தியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவால-யத்தில், நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி பூஜையும் நடந்தது. அங்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிறிஸ்-துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். அ.தி.மு.க., மாணவரணி பகுதி செயலாளர் ஆல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.=