உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரம்

சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரம்

ஓசூர்: சூளகிரி பகுதியில், சிவப்பு தண்டு கீரை அறு-வடை தீவிரமாக நடக்கும் நிலையில், வரத்து அதி-கரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுப்புற பகு-திகளில், 2,400 ஹெக்டேருக்கு மேல், புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள் சாகுபடி செய்யப்-படுகின்றன. இதில், அதிக மருத்துவ குணம் கொண்ட சிவப்பு தண்டு கீரை சாகுபடி பரவலாக நடக்கிறது. சூளகிரி சுற்றுப்புறத்தில் தற்போது சிவப்பு தண்டு கீரை அறுவடை தீவிரமாக நடக்கி-றது. கடந்த, 2 மாதங்களுக்கு முன் வரத்து குறை-வாக இருந்ததால், ஒரு கட்டு கீரை, 30 முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது வரத்து அதிக-ரித்துள்ளதால், ஒரு கட்டு விலை, 15 முதல், 20 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இருந்தாலும், விவசாயிகள் ஆர்வமுடன் அறு-வடை செய்து சந்தைகளுக்கு அனுப்பி வருகின்-றனர். இதற்கு மேல் கீரையின் விலை குறை-யாமல் இருந்தால் போதும், நஷ்டம் ஏற்படாது என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி