சேலம் மாணவி, ஊத்தங்கரை சிறுமி பலி அணை பகுதியில் குளித்தபோது சோகம்
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதி நீரில் குளித்த, சேலம் கல்லுாரி மாணவி, பள்ளி மாணவி, நீரில் மூழ்கி பலியா-கினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்துார் கிரா-மத்தை சேர்ந்தவர் அகிலா. இவரது வீட்டில் நேற்று முன்தினம் ஆடி கிருத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள உள்ளூர் மற்றும் சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த உறவி-னர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இவர்களில் ஐந்து பேர், கீழ்மத்துார் அருகே செட்டியார் வட்டம் பாம்பாறு அணை பகு-தியில் குளிக்க நேற்று காலை, 11:30 மணிக்கு சென்றனர்.இதில் சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த, முதலாமாண்டு கல்லுாரி மாணவி நீலாஸ்ரீ, 17; கீழ்மத்துாரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சாருமேத்ரா, 12, ஆகியோர், அணை நீரில் இறங்கி விளையாடியபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியாகினர். சிங்காரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்ற கல்லுாரி மாணவி உள்பட இருவர், அணை நீரில் மூழ்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது