நகை பறித்த இருவர் கைது
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, சின்ன குன்னத்துாரை சேர்ந்தவர் சந்தி-ரசேகர். இவர் மனைவி சுஜாதா, 42. இவர், ஊத்தங்கரையில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த, 25 இரவு, 8:00 மணியளவில் சின்ன குன்னத்துார் பழத்தோட்டம் அருகில், தன் டூவீலரில் சென்றபோது பைக்கில் பின் தொடர்ந்த, 2 வாலிபர்கள் சுஜாதாவின் கழுத்திலிருந்த, 5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். சுஜாதா புகார் படி, ஊத்தங்கரை போலீசார், சின்ன குன்னத்துாரை சேர்ந்த சூர்யா, 21, வெற்றிவேல், 20, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.