உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணையிலிருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பு

கே.ஆர்.பி., அணையிலிருந்து இன்று முதல் போக சாகுபடிக்கு நீர் திறப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து இன்று (ஜூலை 16) முதல், முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் இருந்து இன்று (ஜூலை 16) முதல், வரும் நவ., 2 வரை, 120 நாட்கள் முதல்போக சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கே.ஆர்.பி., அணையில் இருந்து, இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாயம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.]


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை