ஆடி 2ம் வெள்ளியையொட்டி கோவில்களில் வழிபாடு
கிருஷ்ணகிரி, ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி ேஷகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. கருநாக கன்னியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பழையபேட்டை நேதாஜி சாலை சமயபுர மாரியம்மன் மஞ்சள் அரைக்கும் அலங்காரத்திலும், பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில் நாகக்கன்னி அலங்காரத்திலும், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் பழங்கள் அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.அதே போல், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், ஜக்கப்பன் நகர் ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அலங்காரம் நடந்தது. அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.