உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பரிசு

மாணவர்களுக்கு பரிசு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு இலவச நோட்டு, அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண், பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.தலைவர் வேட்டையார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் காசிராஜன், சுடலைமணி, தர்மர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அருணாச்சலம் வரவேற்றார். மதுரை நாடார் மகாஜன சங்க பொருளாளர் ராஜசேகர், காமராஜர் படத்தை திறந்து வைத்தார். வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி முன்னாள் பொருளாளர் மணிமாறன் பேசினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு செல்வமணி பாலாஜி, பிளஸ் 2 ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உலகராஜா பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ