பஸ் மறியல்
மேலுார்: மேலவளவில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாக கூறி வி.சி.க., மாவட்ட செயலாளர் அரசமுத்துபாண்டி தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை - மேலுார் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.