உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இ சேவை மையத்திலும் விவசாயிகள் பதியலாம்

இ சேவை மையத்திலும் விவசாயிகள் பதியலாம்

பேரையூர்: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்ப்பு பணி அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடந்து வருகிறது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விமலா கூறியதாவது:விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளின் நில தரவுகள் பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இ சேவை மையங்களிலும் விவசாயிகள் பதிவு செய்யலாம்.வேளாண் அலுவலர்கள், மகளிர் திட்ட பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் தேடி வரும்போது விவசாயிகள் ஆதார், நில உடைமை பட்டா, ரேஷன் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை