உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளிகளில் ஆதார் அப்டேட் நிறுத்தம்

பள்ளிகளில் ஆதார் அப்டேட் நிறுத்தம்

பேரையூர்: அரசுப் பள்ளிகளில் அரசின் ஆதார் மையப் பணியாளர்கள் மாணவர்களின் கைரேகையை 'அப்டேட்' செய்யும் பணி திடீரென நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க அவர்களின் வங்கி கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படுகிறது. புதிய வங்கி கணக்கு துவக்க ஆதார் எண் அவசியம் என்பதால் அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் திருத்தம் செய்யும் பணி நடக்கிறது.உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சில நாட்கள் மட்டுமே இப்பணி நடந்தது. சில பள்ளிகளில் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கைரேகை 'அப்டேட்' செய்யப்பட்ட நிலையில் மற்ற மாணவர்களுக்கு இதற்கான பணி மேற்கொள்ளப்படவில்லை.ஆசிரியர்கள் கூறியதாவது: குழந்தைகள் வளரும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படும். இதனால் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்த முற்பட்டால் எமிஸ் தளத்தில் அவர்களின் கைவிரல் ரேகை பொருந்தாது. ஆதார் மையப் பணியாளர்களால் பள்ளிதோறும் கைரேகை புதுப்பிப்பு நடந்தது. 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் புதுப்பிப்பு பணி நடப்பதால் மற்ற மாணவர்கள் தாலுகா அலுவலகம், தபால் அலுவலக ஆதார் சேவை மையத்திற்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ