உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகளை வெளியிட வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி முத்துலட்சுமி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:வி.ஏ.ஓ.,இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4- பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.,ஜன.,30ல் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பித்தோம். ஜூன் 9 ல் எழுத்துத் தேர்வு நடந்தது.ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் முடிந்தபின்தான் இறுதி (கீ)விடைகள், ஓ.எம்.ஆர்.,விடைத்தாள்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி.,அறிவித்தது. இதற்கு 3 ஆண்டுகள் ஆகும். இதன் மூலம் தேர்வின் நோக்கம் நிறைவேறாது. தகுதியற்றவர்கள் தவறான முறையில் பணியில் நுழைய வாய்ப்புள்ளது. அறிவிப்பு சட்டவிரோதமானது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி., நடத்திய சில தேர்வுகளில் தவறுகள் நடந்துள்ளன. குரூப் 4 தேர்வு நியமன நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்வின் இறுதி முடிவு வெளியாவதற்கு முன் இறுதி விடைகளை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.என். மஞ்சுளா: பிற பணிகளுக்கு தேர்வு நடத்தும் முகமைகள் பின்பற்றுவதைப்போல், தேர்வு முடிந்தபின் இறுதி விடைகளை டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை