உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பெருமாள் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம்; டிச.30ல் சொர்க்க வாசல் திறப்பு

 பெருமாள் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம்; டிச.30ல் சொர்க்க வாசல் திறப்பு

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில், அதன் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகியற்றில் மார்கழி பிறப்பை முன்னிட்டு டிச.16 முதல் 2026 ஜன.13 வரை நடை திறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. அழகர்கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு சாத்தப்படும். மதியம் 3:30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தல்லாகுளம், வண்டியூர் பெருமாள் கோயில்களில் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 11:30 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு நடை அடைக்கப்படும். டிச.30ல் சொர்க்க வாசல் அழகர்கோவில், தல்லாகுளம் பெருமாள் கோயில்களில் டிச. 20 முதல் 2026 ஜன. 8 வரை பகல்பத்து, ராப்பத்து உற்ஸவம் நடக்கவுள்ளது. டிச.30ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5:30 மணிக்கு மேல் காலை 6:20 மணிக்குள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ