மேலும் செய்திகள்
திருச்சி விமானம் தாமதம் பயணியர் அவதி
29-Aug-2025
அவனியாபுரம்: துபாயிலிருந்து- மதுரை வந்த விமானம் 6 மணிநேரம் தாமதமாக வந்தது. துபாயிலிருந்து நேற்று காலை 11:20 மணிக்கு மதுரை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் மாலை 5:10 மணிக்கு வந்தது. அந்த விமானத்தில் துபாய் பயணிக்க வேண்டிய பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு மாலை 6:05 மணிக்கு துபாய் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக அடிக்கடி தாமதமாக வருவதும், ரத்து செய்யப்படுவதும் தொடர்கிறது. இதனால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
29-Aug-2025