உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெட்ரோல் விலை உயர்வு; மக்கள் கொதிப்பு

பெட்ரோல் விலை உயர்வு; மக்கள் கொதிப்பு

மதுரை : 'மத்திய அரசின் பெட்ரோல் விலை ஏற்றம் ஆண்டவனுக்கே அடுக்காது,' என, மதுரை வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர். காலண்டரில் தேதி மாறுவதை போல, இந்தியாவில் பெட்ரோல் விலை மாறிவருகிறது. நேற்று முன்தினம் பெட்ரோல் விலை 3 ரூபாய் 32 காசு உயர்ந்தது குறித்து, மதுரை வாகன ஓட்டிகளின் குமுறல்கள் சில:நாகராஜன்(ரயில்வே ஊழியர்): கார், பைக் வைத்திருப்பதால், பெட்ரோல் பயன்பாடு எனக்கு அதிகம். முன்பு, 30, 50 காசுகள் தான் உயர்த்துவர். இப்போது தடாலடியாக 3 ரூபாய் கணக்கில் உயர்த்துகின்றனர். இனி வாகனம் ஓட்டுவதை மறந்துவிடலாம்.சங்கர்(மருந்து விற்பனையாளர்):பைக்கில் தினமும் மதுரை முழுக்க சுற்றி வருகிறேன். ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயர்வதால், விழிபிதுங்குகிறது. கட்டாயத்தை சாதகமாக்கி, விலை ஏற்றினால் ஆண்டவனுக்கே அடுக்காது!முகமது பிர்தவுஸ்(வியாபாரி):நாள் ஒன்றிக்கு ஒரு லிட்டர் செலவாகிறது. இதற்காக மாதக்கணக்கில் குறிப்பிட்டத்தொகை செலவாகிறது. குடும்ப பட்ஜெட்டை பாதிக்கிறது. நீலமேகம்(ஆட்டோ டிரைவர்):விலை ஏறும் போது, பொதுமக்கள் தலையில் சுமர்த்த வேண்டியுள்ளது. இதற்கு மேல் கட்டணம் வசூலித்தால் யாரும் ஆட்டோவில் வரமாட்டார்கள். விலை ஏற்றத்தை நினைத்தால் தலைசுற்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை