உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளாச்சேரியில் களிமண்ணால் தயாராகும் மெகா விளக்குகள் கார்த்திகை தீப வழிபாட்டுக்காக

விளாச்சேரியில் களிமண்ணால் தயாராகும் மெகா விளக்குகள் கார்த்திகை தீப வழிபாட்டுக்காக

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா சைஸ் களிமண் அகல் விளக்குகள் தயாராகின்றன.விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகித கூழ், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்றார் போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள், சுவாமி சிலைகள், அகல் விளக்குகள் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தற்போது களிமண்ணால் ஒரு இன்ச் முதல் அகல் விளக்குகள்தயாரிக்கப்படுகிறது. தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்திற்காக இரண்டு அடி உயரம், 2 அடி அகலத்தில்6 மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணால் தயாரிக்கப்படுகிறது.இதில் ஈடுபட்டுள்ள சாம்பசிவம் கூறுகையில், ''31 ஆண்டுகளாக பெரிய அகல் விளக்குகள் தயாரித்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பகுதியில் களிமண்ணால் தயாரிக்கப்படும் பெரிய விளக்குகள் இவை. இந்த விளக்குகள் 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3 ஆயிரம் விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்கு தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணி கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை