உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.72.39 லட்சம் காணிக்கை

திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.72.39 லட்சம் காணிக்கை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் பணம் நேற்று அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வாளர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.ரூ. 72,39,338 ரொக்கம், தங்கம் 245 கிராம், வெள்ளி 3760 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலய வேத பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !