உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயரத்தில் கால்வாய் பள்ளத்தில் ரோடு

உயரத்தில் கால்வாய் பள்ளத்தில் ரோடு

மேலுார்: மேலுார் நகராட்சி 25 வது வார்டு கருத்தபுளியம்பட்டி நேருஜி 2வது தெருவில் பேவர் பிளாக் ரோடு தாழ்வாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் உயரமாகவும் உள்ளது. கால்வாயினுள் மேடு பள்ளமாக உள்ளதால் கழிவுநீர் வெளியேறவில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளின் முன் தேங்கிக் கிடக்கிறது. நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில்,ரோட்டை உயர்த்துவதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் ரோடு உயர்த்தப்படும். தேங்கிய கழிவு நீரை அகற்றி வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை