உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வேதியியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் ‘மின்வேதியியல் உணரிகளின் புதிய முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் குபேந்திரன் வரவேற்றார். தைவான் நாட்டின் தேசிய சன் யாட்-சென் பல்கலை பேராசிரியர் பாலமுருகன், ‘மறைந்துள்ள மருந்துப் பொருட்களை மின்வேதியியல் உணரிகள் மூலம் கண்டறிதல்’ என்ற தலைப்பில் பேசினார். நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர்கள் மணிவேல், சரவணகுமார், கவுரி சங்கரி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !