உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. உசிலம்பட்டி - - தேனி தேசிய நெடுஞ்சாலையில் மாதரை கிராமம் அருகில் ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்தது. தீயணைப்பு, போலீசார், நெடுஞ்சாலை துறையினர், பொதுமக்கள் இணைந்து போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ