உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏரியில் மூழ்கி சகோதரர்கள் பலி

ஏரியில் மூழ்கி சகோதரர்கள் பலி

திட்டக்குடி: கடலுார் மாவட்டம் ஆவட்டி கிராமத்தை சேர்ந்தவர் முல்லைநாதன் 40; மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் சிற்றரசன் 15, மதியழகன் 12. நேற்று மாலை இருவரும் ஏரிக்கு சென்றனர். அவர்களது தந்தை முல்லைநாதன் தேடிச் சென்றபோது சிற்றரசன், மதியழகன் இருவரும் ஏரியில் மிதந்தனர். அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !