உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாட்டு வெடியை கடித்து கோயில் காளை படுகாயம்

நாட்டு வெடியை கடித்து கோயில் காளை படுகாயம்

பேரையூர் : சாப்டூர் ஆனந்த மாரியம்மன் கோயில் காளை, விளை நிலத்தில் மேய்ச்சலின்போது நாட்டு வெடியை கடித்தது. வெடித்ததில் வாய், தொண்டை, தாடை பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் கூறுகையில், ''மக்காச்சோள கதிர்களை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாக்க இனிப்பு, கால்நடைகள் விரும்பும் உணவு பொருட்களை தடவி நாட்டு வெடிகளை வைத்திருக்கிறார்கள். அதை இந்த காளை தின்றுவிட்டது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி