உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வேளாண் தொழில் துவங்க வங்கிக்கடன் பெற பயிற்சி

 வேளாண் தொழில் துவங்க வங்கிக்கடன் பெற பயிற்சி

மதுரை: மதுரை மகபூப்பாளையம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் (சிப்போ), ஐதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் சார்பில், வேளாண் சார்ந்த தொழில் துவங்க, மானியத்துடன் வங்கிக் கடன் பெற, நவ.24 முதல் 45 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. காளான் வளர்ப்பு, பால், மீன், ஆடு, கோழிப் பண்ணைகள், தேனீ வளர்ப்பு, காய்கறிகள், பழங்கள் பதப்படுத்துதல், உணவுப்பொருள் சார்ந்த மதிப்புக்கூட்டுத் தொழில்கள், விவசாயப் பண்ணை, இயற்கை மேலாண்மை, நர்சரி கார்டன், வேளாண் உள்ளீட்டு மையம், அக்ரி கிளினிக், வேளாண் வணிக மையங்கள் தொடர்பான பயிற்சி வழங்கப்படும். வேளாண் சார்ந்த தொழில் துவங்க, வியாபார திட்ட அறிக்கை தயார் செய்து, மூலப்பொருட்கள், இயந்திரங்கள் கிடைக்கும் இட விவரங்களை வழங்கி, தொழில் முன்னேற்றமடைய ஓராண்டு வரை கண்காணித்து ஆலோசனை வழங்கப்படும். 21 முதல் 60 வயது வரையான இருபாலரும் பங்கேற்கலாம். தங்குமிடம், உணவு இலவசம். பொதுப் பிரிவினருக்கு 36 சதவீதம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பெண்களுக்கு 44 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை நபார்டு வங்கி மானியம் பெற்றுத் தரப்படும். தாவரவியல், விலங்கியல், வேதியியல், வேளாண்கலை, தோட்டக்கலை, சுற்றுச்சூழல் அறிவியல், உணவு தொழில்நுட்பம், மீன்வளம், வேளாண் உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், விவசாயத்தில் பொறியியல், பட்டயப்படிப்பு படித்து ஓராண்டு ஆனவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார், பான் கார்டு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் சிப்போ அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு: 78715 55825.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ