உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காட்டுத்தீயில் கருகிய மரங்கள்

 காட்டுத்தீயில் கருகிய மரங்கள்

கொட்டாம்பட்டி: லெக்கடி பட்டியில் சின்ன குட்டு, பெரிய குட்டு மலையும், மலையின் மறு புறம் வெள்ளமலை பட்டி, பள்ளபட்டி, தொந்தலிங்கபுரம் மலைகளும் உள்ளது. இதில் சின்ன, பெரிய குட்டு மலையில் நேற்று இரவு 8:00 மணிக்கு தீப்பற்றியது. வேகமாக பரவிய தீயால், மலையில் மூலிகை, அரியவகை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்பு துறையினர் மலையின் உச்சியில் தீப்பற்றி எரிந்ததால் தண்ணீரை கொண்டு அணைக்க முடியாமல் அப்பகுதி இளைஞர்களுடன் செடிகளைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைத்து வருகின்றனர். தீக்கட்டுக்கடங்காமல் பரவுவதால் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை