உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / என்னங்க ஒரே குழப்பமா இருக்கு... எதில் ஏறுவது எனத்தெரியாமல் பயணிகள்...

என்னங்க ஒரே குழப்பமா இருக்கு... எதில் ஏறுவது எனத்தெரியாமல் பயணிகள்...

ஸ்டேஷனில் 7 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 7வது பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பெரும்பாலான ரயில் போக்குவரத்திற்கு முதல் 5 பிளாட்பாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் முதல் பிளாட்பாரத்தில் மட்டும் பயணிகள் காத்திருப்பு அறை, பொருட்கள் வைக்கும் அறை, உண வகம், கழிப்பறை வசதிகள் உள்ளன. தீபாவளி முடிந்து பயணிகள் ஊர் திரும்பு வதால் பிளாட்பாரங்களில் அதிக கூட்டம் காணப் படுகிறது. இந்நிலையில், போதிய இடமின்றி ஒரே பிளாட்பாரத்தில் 2 ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. தினமும் காலை 6:50 மணிக்கு புறப்படும் மதுரை - ராமேஸ்வரம், காலை 7:05 மணிக்கு புறப்படும் மதுரை - கோவை ஆகிய ரயில்கள் சில மீட்டர் இடைவெளியில் 3வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவசரகதியில் வரும் பயணிகள், தெளிவான அறிவிப்பின்மை, பிளாட்பாரங்களில் ரயில் விவரங்கள் குறித்து 'டிஸ்பிளே'க்கள் இல்லாததால், ராமேஸ் வரம் செல்வோர் கோவை ரயிலிலும், கோவை செல்வோர் ராமேஸ்வரம் ரயிலிலும் மாறி ஏறி விடுகின்றனர். பின்னர் கூடல்நகர், மதுரை கிழக்கு ஸ்டேஷன்களில் இறங்கி பஸ்களில் பயணிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இதேபோன்று தினமும் காலை 11:35 மணிக்கு புறப்படும் செங்கோட்டை வழியாக செல்லும் மதுரை - குருவாயூர், மதியம் 1:50 மணிக்கு புறப்படும் மதுரை - ராமேஸ்வரம் ஆகிய ரயில்களும் சில மீட்டர் இடைவெளியில் 3வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுகின்றன. தென்காசி, செங்கோட்டை செல்லும் பயணிகள் தவறுதலாக ராமேஸ்வரம் ரயிலில் அமர்ந்து கொள்வதால் குருவாயூர் ரயிலை தவற விடுகின்றனர். பயணிகள் கூறுகையில், ''தினமும் இரவு 11:20 மணிக்கு புறப்படும் மதுரை - புனலுார் ரயில், பகல் முழுதும் பிளாட் பாரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இடபற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய யார்டு வசதி, பிட் லைன்கள் அமைத்து அங்கு கொண்டு செல்ல வேண்டும். பிளாட்பாரங் களில் நிறுத்தப்படும் ரயில்கள் குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raniramz Raniramz
அக் 26, 2025 09:01

பழனி வரை இயக்கினால் தென் மாவட்டம் மக்கள் தரிசிக்க ஏதுவாக இருக்கும்


Raniramz Raniramz
அக் 26, 2025 08:50

மதுரை புனலூர் வண்டியை பழனி வரை இயக்கினால் பக்தர்கள் காலையில் தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும்


Sridhar
அக் 23, 2025 11:19

அரசை குறை சொல்ல வேண்டாம். பணியாளர்களுக்கு சேவை மனப்பான்மை இல்லாததே இத்தகைய நிலைக்கு காரணம். மக்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். உரிமைகளுக்கு முன் கடமை தான் முக்கியம். மக்கள் அனைவரிடமும் அன்பாக இருக்கலாமே


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 23, 2025 15:51

வேலை பார்க்க மனமில்லாமல் அதே நேரம் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு எப்போது பார்த்தாலும் ராஜாஸ்ரீதர் போஸ்டர் ஒட்டிக்கொண்டு திரியும் இவர்களை வைத்து வேலை வாங்கத்தெரியாத அரசு குற்றவாளியே.


நிக்கோல்தாம்சன்
அக் 23, 2025 08:09

யார் இப்படி யோசித்தது என்று அறிந்து அந்த .. குறித்தும் வெளியிடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை