உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்

மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறையை சேர்ந்தவர்களான ராமன், 45, அவரது மகன் ரமேஷ், 28, சிவக்குமார், 30, ஆகியோர் ஒரு பைபர் படகிலும், மற்றொரு படகில் பொன்னுத்துரை, 52, ஜெயச்சந்திரன், 36, ஆகியோர் நேற்று முன்தினம் கடலில் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் அப்பகுதிக்கு ஒரு படகில் வந்த இலங்கையை சேர்ந்த நான்கு பேர், நாகை மீனவர்களின் படகில் ஏறி, கழுத்தில் பட்டாக்கத்தி வைத்து மிரட்டி, படகுகளில் இருந்த ஜி.பி.எஸ்., வாக்கி டாக்கி, மொபைல் போன்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து தங்கள் படகில் ஏற்றிக் கொண்டு தப்பினர்.பொருட்களை பறிகொடுத்த மீனவர்கள், நேற்று காலை கரை திரும்பினர். வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்