உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழாபந்தல் சேர்வையுடன் இன்று தொடக்கம்

ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழாபந்தல் சேர்வையுடன் இன்று தொடக்கம்

ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழாபந்தல் சேர்வையுடன் இன்று தொடக்கம்நாமகிரிப்பேட்டை:ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா, இன்று பந்தல் சேர்வையுடன் தொடங்குகிறது.நாமகிரிப்பேட்டை அடுத்து மெட்டாலா கணவாயில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி வாரம் தீமிதி விழா நடப்பது வழக்கம். சுற்றுவட்டார பகுதியில், ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி விழா இங்கு மட்டுமே நடக்கிறது. இந்தாண்டு விழா, இன்று மாலை பந்தல் சேர்வையுடன் தொடங்குகிறது. நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்படும் பந்தலில் இன்றிரவு ஆஞ்சநேயர் உற்சவர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நாளை காலை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆஞ்சநேயர் நாமகிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக மெட்டாலா கொண்டு செல்லப்படுகிறார்.ஆத்துார் பிரதான சாலை வழியாக இந்த ஊர்வலம் நடக்கவுள்ளது. மதியம் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை பக்தர்கள் தீமிதி விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை