புரட்டாசி பவுர்ணமி ஆஞ்சநேயருக்கு வழிபாடு
நாமக்கல்: புரட்டாசி பவுர்ணமியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாத முதல் ஞாயிறு, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு புஜை, வழிபாடு நடத்தப்படும். அதன்படி, புரட்டாசி பவுர்ணமியான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, காலை, 9:00 மணிக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டு, 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெண்பட்டு அலங்காரத்தில் மஹா தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.