விலைவாசியை கட்டுப்படுத்த இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இ.கம்யூ., கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பு-மணி தலைமை வகித்தார். பொருளாளர் குழந்தான், துணை செய-லாளர் கிருஷ்ணசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் செல்வராஜ், பொரு-ளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சா-வடி உயர்வை ரத்து செய்ய வேண்டும். வேளாண்துறையில் மானாவாரி சாகுபடிக்கென தனித்துறை அமைக்க வேண்டும். இடுபொருள்களை, 75 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். மோகனுார் வட்டாரத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்ப-டுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.