மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: எம்.பி., துவக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்-பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, நேற்று துவங்கியது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாநகராட்சி தலைவர் கலாநிதி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளை-யாட்டு அலுவலர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்-டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கான விளை-யாட்டு போட்டி, பொதுப்பிரிவினர், அரசு ஊழியர், மாற்றுத்திறா-னாளிகளுக்கான விளையாட்டு போட்டி என, 5 பிரிவுகளில், 15 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இப்-போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில், 31,566 பேர் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்-தொகை வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவில் நடைபெற உள்ள விளை-யாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வீரர், வீராங்கனைகள் விளையாட்டோடு, கல்வியிலும் முழு கவனம் செலுத்தி எதிர்கா-லத்தில் டாக்டர், இன்ஜினியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாக உரு-வாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.