தொடர் மழையால் நெல் சாகுபடி தீவிரம்
ராசிபுரம்: ராசிபரம் ஒன்றியம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொப்பப்-பட்டி, பேளுக்குறிச்சி, மூலப்பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதி-களில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெங்காயம், பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதேசமயம், நெல் நடவு செய்ய உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், விவசாயிகள் பயிர் நடவு பணியை தொடங்கி-யுள்ளனர். புதுப்பட்டி பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் நடவு பணி தொடங்கியுள்ளது. தற்போது, துாறல் மழை பெய்தாலும், விவசாயிகள் நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைக்காலத்தில் கூலி ஆட்கள் கிடைக்க-வில்லை என்றாலும், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தாங்களே நடவு பணியை செய்து வருகின்றனர். தொடர்ந்து சில நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால், நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.