உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிற்படுத்தப்பட்டோர் தொழில் துவங்க கடன் உதவி: விண்ணப்பிக்க அழைப்பு

பிற்படுத்தப்பட்டோர் தொழில் துவங்க கடன் உதவி: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: 'பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில் துவங்க கடன் உதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள், தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினை பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு, அதிக பட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. குழுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில், வணிகம் செய்வதற்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக, 1.25 லட்சம் ரூபாய் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு, 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, ஒரு கறவை மாட்டிற்கு, 30,000 ரூபாய் வீதம், இரண்டு கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம், 60,000 ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ