உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயிகளுக்கு உரமிடல் பயிற்சி

விவசாயிகளுக்கு உரமிடல் பயிற்சி

பள்ளிப்பாளையம்,: பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மை துறை சார்பில், நேற்று முன்தினம், சமச்சீர் உர-மிடல், ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை குறைத்தல் பற்-றிய உள் மாவட்ட பயிற்சி, வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது.இயற்கை விவசாயி நல்லசிவம், அங்கக மற்றும் பசுந்தாழ் உரங்-களின் பயன்பாடுகள், சணப்பை, தக்கப்புண்டு, நவதானியங்-களின் முக்கியத்துவம், நன்மை செய்யும் பூச்சியின் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். மேலும், வேளாண்மை துறை அதிகா-ரிகள், மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ப்பு துறை, வேளாண்மை வணிக துறை, மண் பரி-சோதனையின் முக்கியத்துவம், மண்ணிலுள்ள சத்துக்களின் பயன்கள், மண் மற்றும் நீர் மாதிரியை எவ்வாறு சேகரித்தல், சாகு-படி தொழில்நுட்பங்கள், நுண்ணீர் பாசனம், மண் புழு வளர்ப்பு, பயிர் காப்பீடு, பிரதம மந்திரி கவுரவ நிதி, உழவன் செயலியில் தமிழ் மண் வளம், மானிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை