உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பேட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா

பேட்டப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா

மோகனுார்: மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான ஆண்கள் குண்டம் இறங்கியும், பெண்கள் தலையில் பூவாரி கொட்டியும், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.மோகனுார் தாலுகா, பேட்டப்பாளையம் பஞ்., கீழப்பேட்டப்பாளையத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் இறங்கும் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, கடந்த, 17 இரவு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். மதியம், 3:00 மணிக்கு, நாச்சிமார் கோவிலில் இருந்து வேல் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, மலை, 4:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற ஆண், பெண் பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.அதேபோல், பெண்கள் தங்களது தலையில் பூவாரி கொட்டி, சுவாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கிடாவெட்டு நிகழ்ச்சியும், நாளை மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஊர்கவுண்டர், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை