உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவர் சந்தையில் 25 டன் காய்கறி ரூ.10.45 லட்சத்திற்கு விற்பனை

உழவர் சந்தையில் 25 டன் காய்கறி ரூ.10.45 லட்சத்திற்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 25 டன் காய்-கறிகள், 10.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல் 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குதேவையான காய்கறி, பழங்-களை வாங்கி செல்வது வழக்கம்.அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 165 விவ-சாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 19,720 கிலோ காய்கறிகள், 4,900 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள், 350 கிலோ இதர காய்கறிகள், என, மொத்தம், 25,005 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் விற்-பனை செய்யப்பட்டன.அவற்றை, 5,525 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 10 லட்சத்து, 45,950 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 50 ரூபாய், கத்தரி, 72, வெண்டை, 25, சின்ன வெங்காயம், 45, பெரிய வெங்காயம், 46, இஞ்சி, 160 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி