நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 55 டன் காய்கறிகள், 23.78 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்-டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறு-வடை செய்து, நேரடியாக விற்பனை செய்கின்-றனர். பொதுமக்கள், உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்க-மாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்-றுக்கிழமைகளில், அதிகளவில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவை-யான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.நேற்று, கார்த்திகை மாதம், ஐயப்பன் சீசன் மற்றும் கல்யாண முகூர்த்த நாளையொட்டி, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவி-றுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 214 விவ-சாயிகள், உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்ப-னைக்கு கொண்டு வந்திருந்தனர்.காய்கறிகள், 45,650 கிலோ, பழங்கள், 10,070 கிலோ, பூக்கள், 40 கிலோ பூக்கள் என, மொத்தம், 55,760 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 11,152 பொதுமக்கள் வங்கி சென்றனர். அதன் மூலம், 23 லட்சத்து, 78,930 ரூபாய்க்கு விற்பனையாகின.தக்காளி, ஒரு கிலோ, 46 ரூபாய், கத்தரி, 45, வெண்டை, 42, புடலங்காய், 52, பீர்க்கங்காய், 80, பாகற்காய், 60, அவரை, 95, சின்ன வெங்காயம், 44, பெரிய வெங்காயம், 30, தேங்காய், 58 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.