| ADDED : டிச 27, 2025 05:21 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், குளத்துவலவு பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 30 ஆண்-டுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு அரசால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.இக்கிராமத்தின் அருகில், 150 ஏக்கர் ஏரி அமைந்-துள்ளதால் குடியிருப்பை சுற்றி மழைநீர் அதிக-ளவில் தேங்கி நிற்கிறது. இதனால், குடியிருப்-புகள் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், சாலை முற்-றிலும் சேதமாகியுள்ளது. குழந்தைகள் நோய்-தொற்றுக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில், மாற்று இடம் வேண்டி, நேற்று, மா.கம்யூ., ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின், தாசில்தார் கிருஷ்ணவேணி, ஆர்.ஐ., கண்ணன், எலச்சிபா-ளையம் இன்ஸ்பெக்டர் ராதா உள்ளிட்ட அதிகா-ரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு-வார்த்தை நடத்தினர். அப்போது, 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர். மாவட்ட செயற்-குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து-கொண்டனர்.