உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் நடும் விழா நடந்தது. அதையொட்டி, தினமும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி ஊர்வலம், பால் அபிஷேகம், பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தது.நேற்று பிள்ளைமார் சமூகம் சார்பில் பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர். மதியம் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடந்தது. இரவு மண்டகப்படி ஊர்வலத்தில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி