உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையால் வாழைத்தார் விலை சரிவு

மழையால் வாழைத்தார் விலை சரிவு

ப.வேலுார்: ப.வேலுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்-தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிரா-மங்களில், 1,000 ஏக்கரில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இங்கு, பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி,மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. விளைந்த வாழைத்தார்-களை அறுவடை செய்து, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது. அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்வர். மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்-டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்ப-டுகிறது.கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் தார், நேற்று, 200 ரூபாய்; 400 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 300 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 200 ரூபாய்; 5 ரூபாய்க்கு விற்ற மொந்தன் காய் ஒன்று, 3 ரூபாயாக குறைந்துள்ளது.மழையால் வாழைப்பழம் நுகர்வு குறைந்துள்ளது. மேலும், வெளியூர் வியாபாரிகள் வராததால், அறுவடை செய்த வாழைத்-தார்கள் விற்பனையாகாமல், தேக்கமடைந்துள்ளன. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை