உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் பாரதியார் தினவிழா கொண்டாட்டம்

அரசு பள்ளியில் பாரதியார் தினவிழா கொண்டாட்டம்

எலச்சிபாளையம், டிச. 13-எலச்சிபாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவிற்கு தலைமை ஆசிரியர் தங்கமணி தலைமை வகித்தார். மாணவர்கள் பாரதியார் வேடமணிந்து கவிதை, பாடல்கள் ஒப்புவித்தல், சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைகுழு தலைவர் உதய்மீனா, உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் நன்றி கூறினார். அதேபோல், பெரியமணலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவிற்கு தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். 117 மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி