உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலி

மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலி

நாமக்கல் : நாமக்கல் பகுதியில், திடீரென மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி பலியானார். நாமக்கல், அண்ணாநகரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் கோகுலபிரியா, 23. இவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லுாரியில் எம்.காம். இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று இரவு, 7:30 மணியளவில் இவரது வீட்டில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கோகுல பிரியா உடல்நல குறைவால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ