நாமக்கல் : நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகள், 90.86 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில், 14ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில், மார்ச், 26ல் துவங்கி, கடந்த, 8ல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், 163 அரசு பள்ளிகளை சேர்ந்த, 5,774 மாணவர்கள், 5,852 மாணவியர் என, மொத்தம், 11,626 பேர் தேர்வு எழுதினர். அதில், 5,108 மாணவர்கள், 5,455 மாணவியர் என, மொத்தம், 10,563 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 90.86 சதவீதமாகும். 2023 தேர்வை காட்டிலும், 0.53 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டு அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளை சேர்ந்த, 92 மாணவர்கள், 61 மாணவியர் என, மொத்தம், 113 பேர் தேர்வெழுதினர். அவர்களில், 45 மாணவர்கள், 58 மாணவியர் என, மொத்தம், 103 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 91.15 சதவீதம். அதேபோல், ஒரு சமூக நலத்துறை பள்ளியை சேர்ந்த, 9 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினர். அதில், 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 77.78 சதவீதம். நான்கு பழங்குடியினர் நலப்பள்ளியை (ஜீ.டி.ஆர்.,) சேர்ந்த, 109 மாணவர்கள், 140 மாணவியர் என, மொத்தம், 249 பேர் தேர்வு எழுதினர்.அவர்களில், 96 மாணவர்கள், 16 மாணவியர் என, மொத்தம், 212 பேர் தேர்ச்சி பெற்றுள்ளர். இது, 85.14 சதவீதம் தேர்ச்சியாகும். ஒட்டு மொத்தமாக, நாமக்கல் மாவட்டம், அரசு பள்ளிகளில், 90.86 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 14ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.