உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒடிசா தொழிலாளி மயங்கி விழுந்து பலி

ஒடிசா தொழிலாளி மயங்கி விழுந்து பலி

பள்ளிப்பாளையம், ஒடிசாவை சேர்ந்தவர் அனில்கலந்தி, 50; இவர், கடந்த நான்கு மாதமாக, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வந்தார். குடும்பத்துடன் நுாற்பாலை அருகே வசித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, அனில்கலந்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை, வெப்படையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மயங்கி விழுந்துள்ளார். பின், அங்கிருந்து பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அனில்கலந்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது மனைவி ஜானகிதேவி கொடுத்த புகார்படி, வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை